ஜாமீனில் விடுதலையான கனிமொழி அழகிரி வீட்டில் முகாம்

Subscribe to Oneindia Tamil

Kanimozhi
டெல்லி: ஜாமீனில் விடுதலையாகியுள்ள கனிமொழி டெல்லியில் உள்ள தனது அண்ணன் மு.க.அழகிரி வீட்டில் தங்கியுள்ளார். அங்கு தங்கியபடி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவுள்ளார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஜாமீன் கிடைத்ததைத் தொடர்ந்து கனிமொழி நேற்று இரவு விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து நேராக மு.க.அழகிரியின் வீட்டுக்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அங்கு தங்கியிருந்தபடி அவர் ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவுள்ளார்.

டிசம்பர் 3ம் தேதி சென்னை வரும் கனிமொழிக்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்க அழகிரி ஏற்பாடு செய்து வருகிறார். இதற்காக மதுரையிலிருந்தும் தென் மாவட்டங்களிலிருந்தும் பெருமளவில் தனது ஆதரவாளர்களை சென்னைக்கு புறப்ட்டு வர அவர் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

டிசம்பர் 6ம் தேதி மீண்டும் டெல்லி புறப்பட்டுச் செல்லும் கனிமொழி சிபிஐ கோர்ட்டில் விசாரணைக்காக தொடர்ந்து ஆஜராகவுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+