கன்னடர்களுக்கு எதிராக மகாராஷ்டிராவில் கலவரம் வெடிக்கும்- பால் தாக்கரே எச்சரிக்கை

இதுகுறித்து தனது கட்சிப் பத்திரிக்கையான சாம்னாவில் அவர் எழுதியுள்ள தலையங்கத்தில் கூறியுள்ளதாவது:
கர்நாடக எல்லைப் பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள மராத்தி மக்கள் குழப்பம் விளைவிக்க பிறந்தவர்கள். அவர்கள் மராத்தியில் படிக்க விரும்பினால் மகாராஷ்டிராவகு்குப் போக வேண்டியதுதானே என்று கேட்டுள்ளார் கம்பரா.
எட்டு கோடி மராத்தி மக்கள் சார்பில் நான் ஞான பீட கமிட்டியைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், கம்பராவுக்கு அளிக்கப்பட்ட ஞானபீட விருதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதே.
லட்சக்கணக்கான கர்நாடக மக்கள் பல்வேறு தொழில்களில் மும்பையிலும், மகாராஷ்டிராவின் இதரப் பகுதிகளிலும் ஈடுபட்டுள்ளனர், இங்கு வசித்து வருகின்றனர்.
இங்குள்ள ஹோட்டல் தொழிலையே உடுப்பியைச் சேர்ந்தவர்கள்தான் கட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்கள் அத்தனை பேரையும் சொந்த மாநிலத்திற்கேத் திரும்பிப் போங்கள் என்று நாங்கள் கூறினால் என்னாகும்?.
மொழி என்பது யாருடைய எதிரியும் அல்ல என்பதை கம்பரா நினைவில் கொள்ள வேண்டும். கிரிஷ் கர்னாட், டாக்டர் சிவராம காரந்த், யு.ஆர்.அனந்தமூர்த்தி, பீம்சென் ஜோஷி, கங்குபாய் ஹங்கல் ஆகியோர் மராத்தியர்களின் மனதைக் கவர்ந்தவர்கள் என்பதை கம்பரா மறந்து விடக் கூடாது.
கர்நாடகத்தை ஆட்சி புரிந்து வருபவர்கள், மராத்தியர்களுக்கு எதிரான வேலைகளில் ஈடுபட்டு வரும் குண்டர்களை கட்டி வைக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் இங்கு (மகாராஷ்டிராவில்) தீப்பொறி கிளம்புவதை தடுக்க முடியாது.
மராத்தியர்களைத் தாக்கும் குண்டர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். நாங்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இதைக் கூறுகிறோம். இதைச் சொல்வதன் மூலம் நாங்கள் ஆண்மையற்றவர்கள் என்று யாரும் நினைத்து விடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.
பால் தாக்கரேவின் இந்த எச்சரிக்கை பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications