மதுரை 15வது வார்டு தேர்தலில் அதிமுக வெற்றி
மதுரை: மதுரை மாநகராட்சி 15வது வார்டு தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
மதுரை மாநகராட்சிக்கு கடந்த மாதம் 17ம் தேதி தேர்தல் நடந்தது. இதில் 15வது வார்டில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ஜெயமணி திடீரென மரணம் அடைந்தார். இதனால் அந்த வார்டில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்த வார்டில் கடந்த 27ம் தேதி தேர்தல் நடந்தது. வார்டில் மொத்தமுள்ள 8,934 வாக்குகளில் 5,810 வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகள் நேற்று காலை மாநகராட்சி அண்ணா மாளிகையில் எண்ணப்பட்டது.
இதில் அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி 2,428 வாக்குகளும், திமுக வேட்பாளர் மாறவர்மன் 1,985 வாக்குகளும் பெற்றனர். இதனையடுத்து அதிமுக வேட்பாளர் ஜெயலட்சுமி 443 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே மதுரை மாநகராட்சியில் அதிமுகவுக்கு 84 கவுன்சிலர்கள் உள்ளனர். தற்போது 15வது வார்டில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து அதிமுக கவுன்சிலர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளது.
வெள்ளக்கோவிலை கைப்பற்றியது அதிமுக
அதேபோல வெள்ளக்கோவில் நகராட்சியில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி வாகை சூடியுள்ளார்.
திருப்பூரை அடுத்த வெள்ளக்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட திமுக வேட்பாளர் கனகசபாபதி மாரடைப்பால் காலமானார். இதனால் இங்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில் வெள்ளக்கோவில் நகராட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் நகராட்சித் தலைவர் பதவிக்கு அதிமுக சார்பில் கந்தசாமி, திமுக சார்பில் செல்வராஜ், பாஜக சார்பில் இளங்கோ, சுயேச்சைகள் உட்பட மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர்.
நேற்று முன்தினம் காலை 7 மணிக்கு 36 வாக்குச் சாவடிகளிலும் வாக்கு பதிவு துவங்கியது. ஆண் வாக்காளர்கள் 9,647 பேர், பெண் வாக்காளர்கள் 9,387 பேர் என மொத்தம் 19,340 வாக்காளர்கள் வாக்களித்தனர். மொத்தம் 70.84 சதவீத வாக்குகள் பதிவானது.
நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதன்படி வாக்குகள் பதிவான மின்னணு இயந்திரங்கள் வெள்ளக்கோவில் அமல அன்னை மெட்ரிக் பள்ளியில் எண்ணப்பட்டது. இதில் அதிமுக வேட்பாளர் கந்தசாமி 10,707 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன்












Click it and Unblock the Notifications