சென்னை எழும்பூர் குழந்தைகள் மருத்துவமனையில் தீ- நோயாளிகள் ஓட்டம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள அரசினர் குழந்தைகள் மருத்துவமனையில் ஏசி இயந்திரத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சென்னை எழும்பூரில் அரசினர் குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளது. ஏகப்பட்ட அடிப்படை வசதிக் குறைவுகளுடன் இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த நிலையில், இங்குள்ள ஒரு வார்டில் இருந்த ஏசி இயந்திரத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. தீ பரவியதைப் பார்த்த நோயாளிகள் அலறியடித்தபடி அங்கிருந்து ஓடினர்.
சுதாரித்த மருத்துவமனை ஊழியர்கள் அவர்களே தீயணைப்புக் கருவிகளை வைத்து தீயை அணைத்தனர். இதன் மூலம் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications