1 லட்சம் லஞ்சம் பெற்ற நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் கைது
நெல்லை: சாலை ஓப்பந்த பணிக்காக ஒப்பந்ததாரரிடம் 1 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய நெல்லை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளரை லஞ்ச ஓழிப்பு போலீசார் கைது செய்தனர்.
பாளையங்கோட்டையை சேர்ந்தவர் காண்டிரக்டர் செல்லையா. இவர் ஆலங்குளம் அருகே குறிப்பான்குளம் முதல் கிராடங்குளம் வரையிலான சாலைகளை பழுது பார்க்கும் திட்டத்தின் கீழ் பராமரிப்பு செய்யும் பணிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் டெண்டர் பெற்றார்.
இதற்கான வேலையின் மதிப்பு ரு.15 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். சாலையை பழுது பார்க்கும் பணிக்கான உத்தரவை விரைவில் தனக்கு வழங்க கோரி நெல்லை நெடுஞ்சாலை துறையில் கோட்ட பொறியாளராக பணிபுரியும் சவுந்திரராஜை காண்டிரக்டர் செல்லையா அணுகினார்.
அதற்கு அவர் ஓப்பந்த பணிக்கான வேலை உத்தரவை கண்காணிப்பு பொறியாளருக்கு பரிந்துரை செய்ய தனக்கு டெண்டர் மதிப்பில் 8.1 சதவிதமான ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தை தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதற்கு 29 ம் தேதி பணத்தை தருவதாக ஓப்புக் கொண்ட செல்லையா இது குறித்து நெல்லை லஞ்ச ஓழிப்பு போலீசில் புகார் செய்தார்.
கையும் களவுமாக கைது
போலீஸ் ஏற்பாட்டின் பேரில் செவ்வாய்கிமை மாலை செல்லையா ரூ.1 லட்சத்து 31 ஆயிரத்தை சவுந்திரராஜிடம் கொடுத்தார். அப்போது மறைந்திருந்த டிஎஸ்பி மனோகர குமார், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் போலீசார் சவுந்திரராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
அவரிடமிருந்து பணத்தை பறி்முதல் செய்தனர். அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தி சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து பாளையங்கோட்டை தியாகராஜ நகரில் உள்ள அவரது வீட்டிலும் போலீசார் சோதனை நடத்தினர். கைதான சவுந்திர ராஜை பாளையகோட்டை சிறையில் அடைத்தனர்.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications