ஹெல்மட் கட்டாயம் அணிய வேண்டும்- நெல்லை கமிஷனர் அறிவுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில், இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று மாநகர காவல்துறை ஆணையர் கருணாசாகர் அறிவுறுத்தியுள்ளார்.
புதிய காவல்துறை ஆணையராக கருணா சாகர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, ரவுடி ஒழிப்பு மற்றும் கந்துவட்டி ஒழிப்பில் முழு கவனம் செலுத்த உள்ளேன். நெல்லையில் டூவீலரில் செல்வோர் கட்டாயம் ஹெல்மட் அணியவேண்டும். உயிர் பாதுகாப்பிற்காகத்தான் ஹெல்மெட் கட்டாயமாக்கப்படுகிறது.
டிசம்பர் 7ம் தேதி வரை அவகாசம் தரப்படும். அதன் பின்னர் ஹெல்மட் அணியாமல் டூவீலரில் சென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் அபராதம் விதிக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications