சங்கரன்கோவில் இடைத்தேர்தல்- மோதலுக்கு ஆயத்தமாகும் அரசியல் கட்சிகள்

Subscribe to Oneindia Tamil

சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் தொகுதிக்கு ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமடைந்துள்ளனர்.

சங்கரன் கோவில் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான கருப்பசாமி கடந்த மாதம் உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். இதனை காலியாக உள்ள அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. ஜனவரி மாதம் இடைத்தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

முந்திய மதிமுக

சங்கரன்கோவில் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட மதிமுக தயாராகி விட்டது. அக்கட்சியினர் செயல்வீரர்கள் கூட்டத்தையும் நடத்தி முடித்து விட்டனர். தற்போது அதிமுகவும் வரும் 1ம் தேதி கட்சி செயல் வீரர்கள் கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது.

நிதி அமைச்சரும் கட்சியின் பொருளாளருமான பன்னீர் செல்வம் தலைமையில் நடைபெற உள்ள இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையான், நத்தம் விஸ்வநாதன், மாவட்ட செயலாளரும், அமைச்சருமான செந்தூர்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

அதிமுக சார்பி்ல் மாவட்ட பொருளாளர் சண்முகசுந்தரம், தொழிலதிபர் ஜெய்சங்கர், வேலுசாமி ஆகிய 3 பேரில் ஒருவர் போட்டியிடலாம் என்ற பேச்சு தொகுதி முழுவதும் வலம் வருகிறது. திமுக சார்பில் போட்டியிடுவார்கள் குறித்தும் பெருத்த எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

விலை உயர்வு எதிரொலிக்கும்

விலைவாசி உயர்வு, பால்கட்டணம்,பேருந்து கட்டணம் உயர்வினால் மக்களின் மனநிலையை நாடிப்பிடித்து பார்க்க அனைத்து கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இந்த இடைத்தேர்தலில் களமிளங்குவார்கள் என்பதால் சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களம் இப்பொழுதே பரபரப்பை கிளப்பியுள்ளது. மொத்தத்தில் டிசம்பர் 1ம் தேதி முதல் சங்கரன்கோவில் தொகுதியில் இடைத்தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+