சேட்டை செய்த மகனை வாஷிங் மெஷினில் போட்டு கொன்ற தந்தை
பாரிஸ்: நர்சரி பள்ளியில் சேட்டை செய்ததற்காக 3 வயது மகனை வாஷிங் மெஷினில் போட்டு கொலை செய்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து 25 மைல் தொலைவில் உள்ள மியாக்ஸ் என்ற நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோப் ஷேம்பெனாய்ஸ்(33). அவரது மனைவி சார்லின் (25). அவர்களுக்கு 3 வயதில் பாஸ்டீன் என்ற மகன் இருந்தான்.
துருதுருவென வரும் பாஸ்டீன் நர்சரி பள்ளிக்கு சென்று வந்தான். நர்சரி பள்ளியில் சேட்டை செய்ததற்காக பாஸ்டீனை அவனது தந்தை வாஷிங் மெஷினில் போட்டு, சுவிட்சை ஆன் செய்துவிட்டார். குழந்தை வாஷிங் மெஷினில் சிக்கி பரிதாபமாக உயிர் இழந்தது.
இதையடுத்து போலீசார் பாஸ்டீனின் பெற்றோரை கைது செய்தனர். அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டது.
நான் போய் பார்த்த போது பாஸ்டீன் இறந்து பொம்மை மாதிரி இருந்தான் என்று பக்கத்து வீட்டு பெண் ஆலிஸ் தெரிவித்தார்.
ஷேம்பெனாய்ஸுக்கு பாஸ்டீன் எப்பொழுதும் தேவையில்லாத பிள்ளையாகவே இருந்தான். அவன் பிறந்தபோது கூட ஷேம்பெனாய்ஸ் தனது நண்பர்களுடன் மது அருந்தச் சென்றுவிட்டார். பாஸ்டீனை ஏற்கனவே பல முறை வாஷிங் மெஷினில் போட்டு மூடி வைத்துள்ளார் என்று ஷேம்பெனாய்ஸின் தாய் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications