மத உணர்வை தூண்டிய பேச்சு வழக்கில் வருண்காந்திக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: பிலிபிட் தொகுதியில் பெற்ற வெற்றியை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் பதில் அளிக்குமாறு பாஜக இளம் தலைவர் வருண்காந்திக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் பிலிபிட் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட வருண்காந்தி வெற்றிப் பெற்றார். வருண்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது மத உணர்வை தூண்டும் வகையி்ல் பேசியதாக, காங்கிரஸ் வேட்பாளர் வி.எம்.சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதிகள் அல்டமஸ் கபீர், எஸ்எஸ் நிஜ்ஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்சு முன்பாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வி.எம்.சிங் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கிருஷ்ணமணி, வருண்காந்தியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறியாகும். இது தொடர்பான வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தகுந்த முறையில் விசாரிக்காமல் வழக்கை தள்ளுபடி செய்துள்ளது, என்றார்.
2 தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பெஞ்சு, இது குறித்து வருண் காந்தியை பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications