மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்- வாலிபர் கைது
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த ரூ.2 கோடி மதிப்புள்ள கேட்டமைன் போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றினர். இது தொடர்பாக சிவகங்கையை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக, வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு தலைமை கூடுதல் இயக்குனர் ராஜன் உத்தரவின் பேரில் தனிப்படையினர், விமான நிலைய சரக்கு பிரிவில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விழுப்புரத்தில் இருந்து மலேசியாவுக்கு அனுப்ப வந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. மலேசியாவுக்கு 1,000 சேலைகள் அனுப்பும் பார்சல் என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த பார்சலை அதிகாரிகள் திறந்து பார்த்தனர்.
அதில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சேலைகளுக்கு நடுவே, 25 கிலோ எடை கொண்ட கேட்டமைன் போதைப் பொருள் இருந்தது தெரிய வந்தது. போதைப் பொருளை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அந்த பார்சலை மலேசியாவுக்கு அனுப்ப முயன்ற சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த பசீர் அகமது(28) கைது செய்யப்பட்டார். கடத்தப்பட இருந்த போதைப் பொருளின் மதிப்பு ரூ.2 கோடி ஆகும். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
இலங்கைக்கு கடத்தல்:
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப் பொருள் கடத்திய ஒருவர், இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் வந்த விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரை இறங்கியது. விமானப் பயணிகளிடம் வழக்கமான சோதனை நடத்திய போது, தமிழகத்தை சேர்ந்த ஒரு நபரிடம் 50 கிலோ என்சால், 150 ஹான்ஸ் பாக்கெட்கள், 1000 குப்பிகள் (10 கிராம் அளவுள்ள) புகையிலை தூள் உள்ளிட்ட பொருட்களை விமான நிலைய அதிகாரிகள் கைப்பற்றினர். இந்த தகவலை இலங்கை போலீசார் தெரிவித்தனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
புதிய டிஜிபி-யுடன் விஜய் தலைமைச் செயலக சேம்பரில் 'ஒரு மணிநேர' க்ளோஸ் டோர் மீட்டிங்.. 3 முக்கிய அசைன்மென்ட்! -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications