154.5 மில்லியன் டாலர் ஜீவனாம்சம் அளித்து விவகாரத்து பெறும் சீன தொழிலதிபர்
ஹாங்காங்: ஹாங்காங் தொழிலதிபர் சமாதூர் லீ கின்கான் 8 ஆண்டுகள் வாழ்ந்த மனைவி புளோரன்ஸ் சாங்கை விவாகரத்து செய்ய 154.5 மில்லியன் அமெரிக்க டாலர் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் என்று ஹாங்காங் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சீன நாட்டின் ஹாங்காங் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சமாதூர் லீ கின்கான். இவர் கடந்த 2000 ஆண்டில் புளோரன்ஸ் சாங் சூவைவிங் என்பவரை மணந்து கொண்டார். 8 ஆண்டுகள் சேர்ந்த வாழ்ந்த இந்த ஜோடி 2008ம் ஆண்டு, இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதனால் விவகாரத்து பெற்று கொள்ள 2 பேரும் ஹாங்காங் நகர நீதிமன்றத்தில் விவாகரத்து மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை நீதிபதி ஜான் சாண்டர்ஸ் விசாரித்தார். வழக்கு தீர்ப்பில் தொழிலதிபர் சமாதூர் லீ கின் கான் தனது மனைவி புளோரன்சுக்கு 154.5 மில்லியன் அமெரிக்க டாலர் தொகையை ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
ஜீவனாம்சம் தொகையில் 26 அமெரிக்க டாலர்களை உடனடியாகவும், மீத தொகையை இன்னும் 90 நாட்களிலும் சமாதூர் லீ செலுத்த வேண்டும் என்று நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.











Click it and Unblock the Notifications