பணி நீக்க உத்தரவை எதிர்த்து மக்கள் நலப்பணியாளர்கள் தொடர் உண்ணாவிரதம்- நாளை துவக்கம்
திருச்சி: தமிழகத்தில் 13,000 மக்கள் நலப் பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் நாளை (7ம் தேதி) முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்கள் நலப் பணியாளர்கள் 13,000 பேரை, தமிழக அரசு பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு மக்கள் நலப் பணியாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து திருச்சியில் தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் தன.மதிவாணன் கூறியதாவது,
தமிழகத்தில் மக்கள் நலப்பணியாளர்களாக பணியாற்றிய 13,000 பேரை தமிழக அரசு திடீரென பணி நீக்கம் செய்துள்ளது. இதனால் பணி இழந்த குடும்பங்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றன.
தமிழக அரசின் இந்த பணி நீக்க உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநில அரசின் பணி நீக்க உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவி்ட்டது.
கடந்த 1ம் தேதி மக்கள் நலப் பணியாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப் பொதுக் குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தில் நாளை முதல் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஒவ்வொரு நாளும் 2 மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நலப் பணியாளர்கள் வீதம் பணி திரும்ப கிடைக்கும் வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். நாளை நடக்க உள்ள முதல் நாள் உண்ணாவிரதத்தில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்களும், டிசம்பர் 8ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொள்வார்கள் என்றார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications