திருவண்ணாமலையில் மகா தீபம்-அரோகரா முழக்கத்துடன் 20 லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை ஆறு மணி அளவில் மகாதீபம் ஏற்பட்டது. தீபத்தை காண திரண்டிருந்த இருபது லட்சம் பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 29 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய அம்சமான மகாதீபத் திருவிழா இன்று கொண்டாடப்பட்டது. இதனையொட்டி இன்று அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலையில் மகாதீபம் ஏற்றப்படும் முன்னதாக பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வாணை சமேத முருகர், அண்ணாமலையார் சமேத உண்ணாமலையம்மன், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
மகாதீப தரிசனம்
சரியாக 5.56 மணி அளவில் அர்த்தநாரிஸ்வரர் தங்க கொடி மரம் முன்பு எழுந்தருளி நடனமாடினார். அப்போது காலையில் சுவாமி சன்னதியில் ஏற்றப்பட்ட ஐந்து அகல் விளக்குகளையும் உடன் கொண்டு வந்து கொடி மரத்தின் முன்பாக உள்ள அகண்டத்தில் ஒன்று சேர்த்த பின்னர் பஞ்ச பூதங்களை குறிக்கும் விதத்தில் 5 தீப்பந்தங்கள் ஏற்றப்பட்டு அவைகளை கொண்டு உயர்த்தி காட்டினர் இதன் பின்னர் அனேகன் ஏகன் என்ற தத்துவத்தை விளக்கும் வகையில் 2668 அடி உயர மலை மீது அமைக்கப்பட்டிருந்த கொப்பரையில் மகாதீபம் ஏற்றப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த 20 லட்சம் பக்தர்கள் உணர்ச்சிப் பெருக்கில் அண்ணாமலையாருக்கு அரோகரா, உண்ணாமுலையானுக்கு அரோகரா என பக்தி பரவசத்தில் முழக்கமிட்டனர்.
இதன் பின்னர் கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகள் ஒளிர்ந்தன. வான வேடிக்கைகள் விண்ணை அலங்கரித்தன. இந்த காட்சி கண்கொள்ளா காட்சியாக இருந்தது. பக்தர்களின் கூட்டம் அலைமோதியதை ஒட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications