உபி, பஞ்சாப் உள்பட 5 மாநிலங்களுக்கு பிப்ரவரியில் தேர்தல்
டெல்லி: உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிபூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் வரும் பிப்ரவரி மாதத்தில் நடக்கும் என்று கூறப்படுகின்றது.
உத்தர பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப், மணிபூர் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில் அனைத்து தேர்தல் பணிகளும் நிறைவடைந்துவிடும் என்று மேலும் கூறப்படுகின்றது.
தேர்தல் தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உத்தர பிரதேசத்தில் மாயாவதி தலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி ஆட்சியி்ல் உள்ளது. தேர்தல் வருவதற்கு முன்பு மாநிலத்தை 4 ஆகப் பிரிக்க மாயாவதி திட்டமிட்டு சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாநில விவசாயிகள் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்திக்கு ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் வலுவான லோக்பால் மசோதா மட்டும் நடப்பு கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படாவிட்டால் உ.பி.யில் காங்கிரஸுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்போவதாக அனனா ஹசாரே தெரிவித்துள்ளார். ஏற்கனவே அன்னா குழு காங்கிரஸை எதிர்த்து ஹரியானா மாநிலத்தில் பிரச்சாரம் செயதில் அக்கட்சி படுதோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மணிபூர் மற்றும் கோவாவில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. உத்தரகண்டில் பாஜகவும், பஞ்சாபில் பாஜக-எஸ்ஏடி கட்சி கூட்டணி அரசு ஆட்சி செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications