Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லோக்பால்: தனது செல்வாக்கின் மூலம் மத்திய அரசை மமதா நெருக்க வேண்டும்-அன்னா

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில், மேற்கு வங்காள முதல்-மந்தரி மம்தா பானர்ஜி தனது உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, மத்திய அரசை பின்வாங்கச் செய்தார். அவரின் மிரட்டலால், மத்திய அரசின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.அதே போன்று, வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர, மத்திய அரசுக்கு அவர் நெருக்கடி கொடுக்கவேண்டும் என்று கூறியுள்ளார் அன்னா ஹஸாரே.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,

லோக்பால் சட்ட வரம்புக்குள் பிரதமர், கடைநிலை அரசு ஊழியர்கள் ஆகியோரை கொண்டு வர வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். முதலில் ஏற்றுக்கொள்வதாக உறுதி அளித்த மத்திய அரசு, இப்போது பின் வாங்கி உள்ளது. வாக்குறுதியை மீறி விட்டது. கடைநிலை அரசு ஊழியர்கள் விஷயத்தில் தேவைப்பட்டால் தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கூறுகிறது.

பிரதமரையும், கடைநிலை ஊழியர்களையும் உட்படுத்தாத லோக்பால் மசோதா, முழுமையானதாக, வலுவானதாக இருக்க முடியாது. இந்த விஷயத்தில் அரசு ஒரே மாதிரி நிலையை எடுக்காமல், இரட்டை பேச்சு பேசி வருகிறது. இது சரியான செயலாக தெரியவில்லை.

சில்லரை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்கும் விஷயத்தில், மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தனது உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, மத்திய அரசை பின்வாங்கச் செய்தார்.அவரின் மிரட்டலால்,மத்திய அரசின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது.

அதே போன்று, வலுவான லோக்பால் மசோதா கொண்டு வர, மத்திய அரசுக்கு அவர் நெருக்கடி கொடுக்கவேண்டும். ஊழல் மற்றும் லஞ்ச விவகாரங்கள் நாட்டை அச்சுறுத்தி வருகின்றன. லோக்பால் மூலம் இதை 100 சதவிகிதம் ஒழிக்க முடியாவிட்டாலும், 60-70 சதவிகிதம் அளவுக்காவது ஒழித்துக்கட்ட முடியும்.எனவே, வலுவான லோக்பால் அமைய, மம்தா பானர்ஜி குரல் கொடுக்க வேண்டும், மத்திய அரசுக்கு நெருக்கடி தரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

நாட்டிலிருந்து ஊழலை ஒழிக்க நானும் தனது ஆதரவாளர்களும் போராடி வருகிறோம்.வலிமையான கிராமப்புற இந்தியாவை கட்டியெழுப்ப வேண்டும். இப்போது செயல்படும் வழிமுறை தேசத்தின் முன்னேற்றத்துக்கு உதவாது.70 சதவீத பணத்தை மேம்பாட்டுக்கும், 30 சதவீத பணத்தை நிர்வாகத்துக்கும் பயன்படுத்துகிறோம். இல்லையெனில் நாம் நினைப்பது நடக்காது. தேசம் வளரவேண்டும் என்பதில் இளைஞர்கள் யாவரும் உறுதியுடன் உள்ளனர் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+