மேற்கு வங்க மாநிலம் விஷ சாராய பலி 117 ஆக உயர்வு
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் விஷ சாரயம் அருந்தி பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்டவர்கள் சாராயம் அருந்தியதாக கூறப்படுவதால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.
மேற்கு வங்காள மாநிலம் தெற்கு பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சங்கராம்புர் உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்தவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு மதுக்கடையில் நேற்று இரவு மது குடித்துள்ளனர். இதில் ஏராளமானோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. சாராயம் குடித்த பலரும் ஆங்காங்கே மயங்கி விழுந்து உயிரிழந்த பின்பே அவர்கள் குடித்தது விஷசாராயம் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. சாராயம் குடித்த நூற்றுக்கும் மேற்பட்டோர், வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர்கள் பலரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
உறவினர்கள் ஆத்திரம்
ஒரே கிராமத்தைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதால் அவர்களின் உறவினர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்த சாராயக்கடைகளை அடித்து நொறுக்கினர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மேற்கு வங்க அரசு தலா 2 லட்சம் ரூபாய் நிதி உதவி அளித்துள்ளது. முதற்கட்டமாக இறுதி சடங்கு நடத்த 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விஷ சாராயம் விற்ற நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அடுத்தடுத்த சோகம்
சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தாவில் உள்ள எஎம்ஆர்ஐ மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில், 91 பேர் பலியான சோகம் மறைவதற்குள், விஷ சாராயம் குடித்து, 117 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications