தமிழக பள்ளி மாணவர்களை இடுக்கியிலிருந்து விரட்டும் கேரள ரவுடிகள்
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையால் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி பயிலும் தமிழக மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து தப்பி வந்தவர்கள் கூறியுள்ளனர்.
விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்ட கேரளா முயற்சித்து வருகிறது. இதற்கு தமிழக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் இருமாநில எல்லைப் பகுதிகளிலும் பதற்றம் உருவாகியுள்ளது.
ஆயிரக்கணக்கானோர் தஞ்சம்
பீர்மேடு, தேவிகுளத்தை உள்ளடக்கிய இடுக்கி மாவட்டத்தை தமிழகத்துடன் மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுத்து வருகிறது. தமிழர்களுக்கு ஆதரவாக இடுக்கி மாவட்ட தமிழர்கள் போராடி வருவதால் அவர்களை மலையாளிகள் தாக்கி அங்கிருந்து விரட்டி வருகின்றனர்.
நெடுங்குண்டம், பாரத்தோடு, காரித்தோடு, உடும்பன் சோலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் கேரள ரவுடிகளின் தாக்குதலுக்கு குடும்பம் குடும்பமாக வெளியேறிவருகின்றனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாக்குலூத்து மெட்டு, ராமக்கல்மெட்டு பாதைகளில் மலையில் இறங்கி நடந்தே தமிழகப் பகுதியான தேவாரத்தில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.
மாணவர்கள் பாதிப்பு
இந்த நிலையில் விடுதிகளில் தங்கி படிக்கும் தமிழக மாணவர்களை பள்ளிகளில் இருந்து வெளியேற்றுமாறு அங்குள்ள மலையாளிகள் பலரும் பள்ளிகளுக்கு சென்று நெருக்கடி கொடுத்து வருவதாக அங்கிருந்து தப்பி வந்துள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் இருந்து வெளியேறாமல் உள்ள தமிழர்களின் பிள்ளைகளை கேரளாவில் தமிழகத்துக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் பங்கேற்குமாறு மிரட்டி வருகின்றனர். இடுக்கி மாவட்டத்தில் உள்ள தமிழ் பள்ளிகளுக்கு பலவித நெருக்கடி கொடுக்கின்றனர்.
இது குறித்து போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தால் போலீசார் வந்து வேடிக்கை பார்த்துவிட்டு நடவடிக்கை எதுவும் எடுக்க மறுக்கிறார்கள் என்று அங்கிருந்து தப்பிவந்த தமிழர்கள் கூறுகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications