குழந்தைகளுக்கு 5 தடுப்பூசிகளுக்கு பதிலாக ஒரே தடுப்பூசி போடும் முறை - தமிழகத்தில் நாளை அறிமுகம்

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
இந்தியாவில் சுகாதாரம், குடும்ப நல திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் 11 லட்சம் பிறந்த குழந்தைகளுக்கு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் பிசிஜி, ஓபிவி, டிபிடி, தட்டம்மை, மஞ்சள் காமாலை தடுப்பு உள்ளிட்ட 5 வகையான தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன.
இந்த தடுப்பூசிகளின் மூலம் குழந்தைகளுக்கு காசநோய், இளம்பிள்ளைவாதம், தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை-பி, தட்டம்மை உள்ளிட்ட உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது.
கடந்த 30 ஆண்டுகளாக தடுப்பூசித் திட்டத்தில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டதால், கடந்த 7 ஆண்டுகளாக போலியோ, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி உள்ளிட்ட நோய்களின் தாக்கம் தமிழகத்தில் ஏற்படவில்லை. தட்டம்மை பாதிப்பும் வெகுவாக குறைந்து உள்ளது.
தமிழகத்தில் சுகாதாரத்திற்கான சிறந்த உள்கட்டமைப்பு இருப்பதால், தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்துவதில் சிறந்த மாநிலமாக திகழ்வதாலும், மத்திய அரசு பெண்டாவேலண்ட் தடுப்பூசியை அறிமுகப்படுத்த தமிழகத்தை தேர்வு செய்துள்ளது.
ஏற்கனவே தடுப்பூசி திட்டத்தில் வழங்கப்படும் டிபிடி, மஞ்சள் காமாலை-பி தடுப்பூசிகளுடன் எச்ஐபி சேர்க்கப்பட்டு பெண்டாவேலண்ட என்ற ஒரே தடுப்பூசியாக தற்போது வழங்கப்பட உள்ளது.
6வது, 10வது, 14வது வாரங்களில் 3 தவணைகளாக குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து உடன் இந்த தடுப்பூசி கொடுக்க வேண்டும். டிசம்பர் மாதத்தில் இருந்து டிபிடி முதல் தவணை தடுப்பூசி போட தகுதி உள்ள 11.5 மாத குழந்தைகளுக்கு மட்டுமே பெண்டாவேலண்ட் தடுப்பூசி போடப்படும்.
பெண்டாவேலண்ட் தடுப்பூசி தொண்ட அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை-பி, நிமோனியா, மூளைப் பாதிப்பு உள்ளிட்ட 5 உயிர்க் கொல்லி நோய்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கிறது. மேலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள எச்ஐபி தடுப்பூசி, 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ஏற்படும் நிமோனியா மற்றும் மூளை பாதிப்பை குறைக்கிறது.
இந்த திட்டத்தின் மூலம் 2011-12ல் 3.60 லட்சம் குழந்தைகள் பயன்பெறுவர். வருங்காலத்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 11 லட்சம் குழந்தைகளுக்கு 3 தவணைகளாக பெண்டாவேலண்ட் தடுப்பூசி போடப்பட்டு, பயன் பெறுவார்கள்.
இந்த திட்டத்திற்கான துவக்க விழா நாளை(டிசம்பர் 17) காலை 10 மணிக்கு வேலூரில் உள்ள அலமேலுமங்காபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற உள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications