சிங்கப்பூரில் இருந்து வந்த விமானத்தில் ஒரு கிலோ தங்கம் கடத்தியவர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி: சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் தங்கம், மெமரி கார்டுகளை கடத்தி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமானத்திற்கு டைகர் ஏர்வேஸ் விமானம் வந்து இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை கஸ்டம்ஸ் அதிகாரிகள் வழக்கமான சோதனைக்கு உட்படுத்தினர்.
அப்போது சென்னை எல்லீஸ் நகரைச் சேர்ந்த சர்புதீன்(47) என்ற வாலிபர் தனது பேன்டில் மறைத்து, 15 ஆயிரம் மெமரி கார்டுகள் மற்றும் 268 தங்கச் சங்கிலிகள் (ஒரு கிலோ ) உள்ளிட்டவற்றை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள அந்த பொருட்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சர்புதீனை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.












Click it and Unblock the Notifications