புயல் பாதித்த கடலூரில் பள்ளிகளுக்கு 9ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil

தானே புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கடலூர் மாவட்டத்தில் இன்னும் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சார விநியோகம் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. குடிநீர், பால் என அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது. சாலைகள் சீரமைக்கப்படவில்லை. போக்குவரத்திலும் பாதிப்பு நிலவுகிறது.
இந்த நிலையில் நாளை வரை கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. தற்போது இது ஜனவரி 9ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 8ம் வகுப்பு வரை மட்டும் இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. மற்ற வகுப்புகளுக்கு நாளை பள்ளிகள் தொடங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அமுதவள்ளி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications