தேர்தல் சின்னமான யானையை போர்வையைப் போட்டு மூடுமா தேர்தல் ஆணையம்?-சிபிஐ கேள்வி!
டெல்லி: தேர்தல் சின்னம் என்பதற்காக நாட்டில் உள்ள யானைகளையெல்லாம் மறைக்க முயலுமா தேர்தல் ஆணையம் என்று கேட்டுள்ளார் சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா.
பகுஜன் சமாஜ்கட்சியின் சின்னத்துடன் உ.பி. முதல்வர் மாயாவதியின் சிலைகள் இருப்பதால் அவற்றை துணியைப் போட்டு மூடுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்குப் பல்வேறு கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிபிஐ தேசியச் செயலாளர் டி.ராஜா கூறுகையில், இது சற்றும் பொருத்தமற்ற, அர்த்தமற்ற, நடைமுறைக்கு சற்றும் சாத்தியப்படாத நடவடிக்கை. இது பல்வேறு சிக்கல்களையே ஏற்படுத்தும்.
இதை அமல்படுத்துவது என்பது சாத்தியமே இல்லாதது. இப்படிப்பட்ட முடிவை எடுக்கும் முன்பு, குறிப்பாக தேர்தல் சின்னங்கள் குறித்த முடிவுகளை எடுக்கும் முன்பு ஒன்றுக்கு நான்கு முறை சிந்திக்க வேண்டும்.
நாட்டில் ஏராளமான யானைகள் நடமாடுகின்றன. அவற்றையெல்லாம் எப்படி மறைக்க முடியும்.? கைப் பம்புகள் ஏராளமாக இருக்கின்றன.அவற்றை துணியைப் போட்டு மூடுமா தேர்தல் ஆணையம்.












Click it and Unblock the Notifications