பயணிகள் ரயில் மீது ரயில் எஞ்சின் மோதல்: உயிர்சேதம் தவிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: விழுப்புரம் ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருந்த ரயில் மீது, மற்றொரு ரயிலின் எஞ்சின் மோதிய விபத்தில், ரயில் பெட்டிகள் தடம் புரண்டு சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
திங்கட்கிழமை காலை 5 மணிக்கு, மயிலாடுதுறை செல்லவேண்டிய பயணிகள் ரயில், விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அப்போது டீசல் நிரப்பிவிட்டு வேகமாக வந்த மற்றொரு ரயிலின் எஞ்சின், மயிலாடுதுறை ரயிலின் பின்பகுதியில், பலத்த சத்தத்துடன் மோதியது.
இந்த விபத்தில், மயிலாடுதுறை பயணிகள் ரயிலின் கடைசி இரண்டு பெட்டிகள் தடம்புரண்டன. விபத்து குறித்து, எஞ்சின் டிரைவர் எத்திராஜிடம் ரயில்வே அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை 3 மணியளவில் விபத்து நேர்ந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை












Click it and Unblock the Notifications