உ.பி.யில் காங்.கைத் தாக்காமல் 'பொத்தாம் பொதுவாக' பிரசாரம் செய்ய அன்னா குழு முடிவு
காஸியாபாத்: உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தின்போது எந்தக் கட்சியையும் குறிப்பிட்டுக் குறி வைத்துத் தாக்காமல் பொதுவான முறையில் பிரசாரம் செய்வது என்று அன்னா ஹஸாரே குழு தீர்மானித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது.
அன்னா ஹஸாரே குழுவினர் நேற்று காஸியாபாத்தில் கூடி ஐந்து மாநில தேர்தல் பிரசாரம் குறித்து விவாதித்தனர். குறிப்பாக உ.பி. சட்டசபைத் தேர்தல் பிரசாரம் குறித்து விவாதிக்கப்பட்டது. அன்னா ஹஸாரே இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
கூட்டத்தில் முக்கிய உறுப்பினரான கிரண் பேடி கலந்து கொள்ளவில்லை. சில தனிப்பட்ட நிகழ்ச்சிகள் இருப்பதால் தன்னால் வர முடியவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார். அதேபோல பிரபல சமூக சேவகர் மேதா பத்கரும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் அவர் ஒருகடிதம் அனுப்பியிருந்தார். அதில், காங்கிரஸை மட்டும் லோக்பால் விவகாரத்தில் நாம் குறிப்பிட்டுத் தாக்கக் கூடாது. வலுவான லோக்பால் அமையாமல் போனதற்கு அனைத்துக் கட்சிகளுமேதான் காரணம் என்று கூறியிருந்தார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த பெரும்பாலான உறுப்பினர்களும் காங்கிரஸை மட்டும் தாக்கி பிரசாரம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளனர். மேலும் குறிப்பிட்ட எந்தக் கட்சியையும் எதிர்த்துப் பிரசாரம் செய்யக் கூடாது என்றும் ஊழல் எதிர்ப்பையும், ஜன் லோக்பால் மசோதாவையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்பட வேண்டும் என்றும் ஆலோசனை தரப்பட்டது.
உ.பி. உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸைத் தாக்கிப் பிரசாரம் செய்யாமல் பொதுவான முறையில் பிரசாரம் செய்வதுதான் நல்லது என்றும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து அன்னாவிடம் தெரிவிக்க அரவிந்த் கேஜ்ரிவாலும், பிரஷாந்த் பூஷனும் இன்று ராலேகான் சித்திக்குச் செல்கின்றனர். அப்போது கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்த யோசனைகளை அவர்கள் அன்னாவிடம் தெரிவிப்பார்கள்.
செய்தியாளர்களிடம் பிரஷாந்த் பூஷன் பேசுகையில், இன்றைய கூட்டத்தில் பல யோசனைகள் தெரிவிக்கப்பட்டன. அவை குறித்து அனைவரும் விவாதித்தோம். எதிர்காலத் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. எப்படி பிரசாரத்தை வலுப்படுத்துவது என்பது குறித்தும் விவாதித்தோம். அன்னாவும், சில முக்கிய உறுப்பினர்களும் கூட்டத்தில் இல்லாததால், முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. அன்னாதான் இறுதி முடிவை எடுப்பார்.
முன்னதாக காங்கிரஸை கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்வது என்று அன்னா குழு அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.
ஆனால் இதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்தும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. அன்னா ஆதரவாளர்கள் பலரே இந்த முடிவுக்கு ஆட்சேபனை தெரிவித்திருந்தனர். இதன் எதிரொலியாக மும்பையில் அன்னா நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் தோல்வி அடைந்தது. கூட்டமே வரவில்லை.
இதையடுத்தே தற்போது தேர்தல் பிரசாரத்தில் அடக்கி வாசிக்க அன்னா குழு முடிவு செய்துள்ளது.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹரியானா மாநிலம் ஹிஸ்ஸார் சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத் தேர்தலின்போது அன்னா குழுவினர் காங்கிரஸுக்கு எதிராக தீவிரப் பிரசாரம் மேற்கொண்டனர். அதில் காங்கிரஸ் டெபாசிட்டைப் பறி கொடுத்து படுதோல்வியைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது அன்னா குழுவின் பிரசாரத்தால் அல்ல என்பதும் முக்கியமானது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications