பொங்கல் சீர் : பாவூர்சத்திரத்தில் காய்கறிகள் விற்பனை தீவிரம்
பாவூர்சத்திரம் : பொங்கலை முன்னிட்டு பாவூர்சத்திரத்தில் காய்கறிகள் விற்பனை தீவிரமடைந்துள்ளது. பொதுமக்கள் ஆர்வத்துடன் காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர்.
பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுவதை ஒட்டி புதிதாக திருமணம் ஆனவர்களுக்கு பெற்றோர்கள், சகோதரர்கள் பொங்கல் சீர்வரிசை கொடுத்து வருகிறார்கள். இதற்காக காய்கறிகள், கிழங்குகள், மற்றும் பாத்திர கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
பொங்கல் பண்டிகையின் போது காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகள் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவை அதிக விலைக்கு விற்கப்படும். கடந்த ஆண்டு கிழங்கு வகைகளின் விலை அதிகமாக இருந்தது. ஒரு கிலோ சிறுகிழங்கு ரூ.40க்கும் அதிமாக விற்கப்பட்டது. மற்ற கிழங்கு வகைகளும் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனையானது. ஆனால் இந்த ஆண்டு பாவூர்சத்திரம் சந்தையில் சீரான விலை உள்ளது. ஒரு கிலோ கத்தரி ரூ.16, தக்காளி ரூ.11, வெண்டை ரூ.15, சிறுகிழங்கு ரூ.32, உருளை ரூ.15, சேம்பு ரூ.19, பால்சேம்பு ரூ.43, சேனை ரூ.19, கருணை ரூ.17, வள்ளி கிழங்கு ரூ.34, பீட்ரூட் ரூ.23, பல்லாரி ரூ.11, வெங்காயம் ரூ.15, வாழைக்காய் ரூ.14, மல்லி இலை ரூ.4, சீனி அவரைக்காய் ரூ.21, மிளகாய் ரூ.22, பாகற்காய் ரூ.20, புடலை ரூ.18, பூசணி, தடிங்காய் ரூ.7, மஞ்சள் குலை 1 மூடு ரூ.10 என விற்கப்பனை செய்யப்படுகிறது.












Click it and Unblock the Notifications