காசு கேட்டால் 'சப்'புன்னு அடிச்சுருங்க...ராமதாஸ் அட்டாக் பேச்சு!
Subscribe to Oneindia Tamil

ராமதாஸ் பேசுகையில், பாமகவை தோற்கடிக்க, தேர்தலுக்கு தேர்தல் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், எழுதப்படாத மறைமுக கூட்டணி அமைக்கின்றனர். அவர்கள், பா.ம.க., தயவால் வெற்றி பெறுகின்றனர். அதனால், வரும் தேர்தல்களில் கூட்டணியை நம்பாமல் மக்களை நம்புவோம்.
பா.ம.க.,வை விட உயர்ந்த கொள்கை, கோட்பாடு உள்ள கட்சிகள் எதுவும் இல்லை. திராவிட கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை பிச்சைக் காரர்களாக்கி விட்டனர்.
தேர்தல் செலவு என்பது, ஊழல் புரிவதற்கான ஒரு முதலீடு தான். அதனால், தேர்தலில் ஓட்டு போடவும், தேர்தல் செலவுக்கு பணம் கேட்போரின் கன்னத்தில் பளார் அடி கொடுக்க வேண்டும். தமிழகத்தில் திராவிட கட்சிகளை அகற்றுவதே, பா.ம.க., வின் முதல் வேலை என்றார்.
என்ன 'ஐயா', இப்படி 'பளிச்'சுன்னு பேசிட்டாரே என்று பாமகவினரே சற்று அதிர்ச்சி அடைந்தனராம் இந்தப் பேச்சைக் கேட்டு!.












Click it and Unblock the Notifications