என் மீதான நில அபகரிப்புப் புகாரில் உண்ணை இல்லை-இந்து என்.ராம் மறுப்பு
சென்னை: என் மீது முன்னாள் அதிமுக எம்.பி. கே.சி.பழனிச்சாமி சுமத்தியுள்ள நில அபகரிப்புப் புகாரில் உண்மை இல்லை என்று இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் மறுத்துள்ளார்.
இதுகுறித்து ராம் கூறஉகையில், இந்தப் புகார்கள் குறித்து கே.சி.பழனிச்சாமி மீது கஸ்தூரி அன்ட் சன்ஸ் நிறுவனம் வழக்குத் தொடரும். பழனிச்சாமியின் கடந்த காலம் குறித்த அனைத்து விவரங்களும் எங்களிடம் உள்ளன. அவருக்கு எதிராக கோர்ட்டில் கூறப்பட்ட கருத்துக்களும் உள்ளன.அவரை மட்டுமல்லாமல், இந்த தவறான செய்தியை வெளியிட்ட அனைத்து மீடியா நிறுவனங்கள் மீதும் வழக்குத் தொடருவோம். பழனிச்சாமி ஒரு பொய் சொல்லி, அதுவே அவரது வழக்கமாக இருக்கிறது என்று கூறியுள்ளார் ராம்.
முன்னதாக டிஜிபி ராமானுஜம் மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி ஆகியோரை சமீபத்தில் நேரில் சந்தித்த பழனிச்சாமி அவர்களிடம் ஒரு புகார் கொடுத்தார். அதில் ராம் உள்ளிட்ட இருவர் மீது நில அபகரிப்பு,மிரட்டல் புகார் கொடுத்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications