கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்பது பொய்: நிபுணர் குழு தலைவர்
கன்னியாகுமரி: அணு உலையும், அணுகுண்டும ஒன்றல்ல. கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்று சொல்வது பொய் பிரச்சாரம் என்று மத்திய நிபுணர் குழு தலைவர் தெரிவித்துள்ளார்.
கூடங்குளம் அணு உலையை ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழுவினர் நேற்று கன்னியாகுமரி வந்தனர். அவர்கள் நாளை (31ம் தேதி) நெல்லை மாவட்ட கலெக்டர் செல்வராஜை சந்தித்து தங்கள் அறிக்கையை அளிக்கவிருக்கின்றனர்.
இந்த குழுவின் தலைவர் டாக்டர் முத்துநாயகம் நேற்று கன்னியாகுமரியில் நிருபர்களிடம் கூறியதாவது,
கூடங்குளம் அணு உலை தொடர்பான மக்களின் பயத்தை போக்க மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஏற்கனவே அனைத்து அம்சங்களையும் தீவிரமாக ஆராய்ந்து போராட்டக் குழுவினருக்கு பதில் தந்துவிட்டோம். அதே போல் நாங்கள் மீண்டும் விரிவாக விவாதித்து அவர்கள கேள்விகளுக்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பொறுப்பு மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து பதில் சொல்வது.
அணு உலையும், அணுகுண்டும் ஒன்றல்ல. அணு உலை வெடித்தால் அணு குண்டு வெடிப்பது போல் ஆகிவிடும் என்ற தவறான கருத்துகள் மக்களிடம் உள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் ஆதிய நாடுகளில் ஏற்பட்ட விபத்து போல் இங்கு ஏற்பட வாய்ப்பே இல்லை. ஏனென்றால் இங்கு அமைக்கப்பட்டிருக்கும் அணு உலை பாதுகாப்பானது. இந்தியாவில் 6 அணு உலைகள் கடந்த 40 வருடங்களாக பாதுகாப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை எந்த விபத்தும் நடக்கவில்லை. அந்த 6 அணு உலைகளை விட கூடங்குளம் அணு உலை மிக மிக பாதுகாப்பானது.
இங்கு வேலை பார்க்கும் விஞ்ஞானிகளும் இங்கேயே தான் தங்கியிருக்கிறார்கள். அப்படி பிரச்சனை என்றால் விஞ்ஞானிகள் அணு உலை அருகே இருப்பார்களா. எனவே, கூடங்குளம் அணு உலை ஆபத்தானது என்று சொல்வது பொய் பிரச்சாரம் என்றார்.












Click it and Unblock the Notifications