For Daily Alerts
Just In
டெல்லியில் கோத்தபயா: இந்திய-இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் ஆலோசனை
டெல்லி: இலங்கை பாதுகாப்புத்துறை செயலாளர் கோத்தபயா ராஜபக்சே தலைமையிலான குழு டெல்லி வந்துள்ளது. இக்குழு இந்திய பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.
இது ஆண்டுதோறும் நடைபெறும் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் என்று மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்புத்துறை செயலாளர் சக்திகாந்த் ஷர்மா தலைமையில் இந்தியக் குழு இலங்கை குழுவுடன் ஆலோசனை நடத்தியது.
இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு மற்றும் இலங்கை ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குதல் உள்ளிட்ட இருநாட்டு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.
மேலும் பாதுகாப்பு அமைச்சர் அந்தோணியையும் இருதரப்பு குழுவும் செளத் பிளாக்கில் சந்தித்து ஆலோசித்தது.
Comments
English summary
Aiming to enhance bilateral defence cooperation and to discuss the regional security situation, India and Sri Lanka have held the inaugural round of Annual Defence Dialogue in delhi.
Story first published: Wednesday, February 1, 2012, 17:02 [IST]