செல்போன் இணைப்புகளுக்கான விதிமுறைகள்: 'டிராய்'க்கு சுப்ரீம் கோர்ட் கெடு!
டெல்லி: மொபைல் போன் இணைப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குவது குறித்து, ஆலோசனையை தெரிவிக்க தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான 'டிராய்க்கு' இறுதி வாய்ப்பு அளிக்கப்படுவதாகம், இந்த வாய்ப்பை 'டிராய்' சரியாக பயன்படுத்தி உரிய ஆலோசனைகளை வழங்காவிட்டால், நீதிமன்றமே சில கடும் உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டியிருக்கும் என்றும் சுப்ரீம் கோர்ட் எச்சரித்துள்ளது.
இது குறித்து கொல்கத்தாவைச் சேர்ந்த ஒருவர் தாக்கல் செய்த பொது நல மனுவில், போலி ஆவணங்களைக் கொடுத்து செல்போன்களுக்கான சிம் கார்டுகளை வாங்குவது அதிகரித்து வருகிறது. டெல்லி, மும்பை போன்ற இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளும் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் தொடர்புடையவர்களும் போலி ஆவணங்கள் மூலம் வாங்கிய சிம் கார்டுகளையே பயன்படுத்தியுள்ளது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
போஸ்ட் பெய்டு இணைப்புகளை வழங்க செல்போன் நிறுவனங்கள் விதிமுறைகளைக் கடுமையாக பின்பற்றுகின்றன. ஆனால், ப்ரீபெய்டு இணைப்புகளை வழங்குவதில் விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை.
இதனால் மொபைல் போன் இணைப்பு வழங்குவதற்கான விதிமுறைகளை கடுமையாக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச். கபாடியா, நீதிபதிகள் ஏ.கே.பட்நாயக், ஸ்வதந்தர் குமார் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில்,
இந்த விஷயம் தொடர்பாக தொலைத் தொடர்புத்துறையின் நெறிமுறைகளை கடுமையாக்க ஆலோசனைகள் வழங்குமாறு டிராய்க்கு ஏற்கெனவே உத்தரவிடப்பட்டிருந்தது. எனினும் அவர்கள் சரியான ஆலோசனைகளை இதுவரை வழங்கவில்லை.
இப்போது மீண்டும் டிராயின் ஆலோசனையைக் கேட்கிறோம். இது அவர்களுக்கு வழங்கப்படும் கடைசி வாய்ப்பு. அடுத்த முறை அவர்கள் சரியான விதிகளை வகுத்து மத்திய அரசிடம் வழங்கத் தவறினால், நீதிமன்றமே நெறிமுறைகளை வழங்கும். இரு வாரங்களுக்குப் பின் மீண்டும் இதனை விசாரிப்போம் என்று நீதிபதிகள் கூறினர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications