பிரிந்து வாழும் மனைவி வாழ கணவர் வீட்டில் இடம் ஒதுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

வழக்கு என்ன?
டெல்லியை சேர்ந்த பனாட் மற்றும் சவீதா. கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம், 23 ந் தேதி திருமணம் செய்துகொண்டு தம்பதியராக வாழ்ந்தனர்.
அவர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து 2005 ம் ஆண்டு ஜுலை முதல் பிரிந்து வாழத் தொடங்கினர். 2006 ம் ஆண்டு, நவம்பர் 29 ந் தேதி உள்ளூர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றாத்தில் குடும்ப வன்முறை சட்டத்தின்கீழ் சவீதா ஒரு வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த மாஜிஸ்திரேட்டு, பிரிந்து போன மனைவி சவீதாவுக்கு கணவர் தனது வீட்டின் முதல் மாடியை ஒதுக்குவதுடன், மாதம் ரூ.6 ஆயிரம் ஜீவனாம்சம் தருமாறு உத்தரவிட்டார். அப்படி தர விரும்பாத பட்சத்தில் சவீதா வேறு வீடு பார்த்து குடியேற ஏற்ற வகையில் வாடகை என்ற பெயரில் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்புகளை எதிர்த்து சவீதாவின் கணவர் பனாட் மேல்நீதிமன்றங்களில் முறையீடு செய்தும் பலனில்லை. அனைத்து நீதிமன்றங்களிலும் தீர்ப்பு தள்ளுபடியாக கடைசியாக உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தார். இதை நீதிபதிகள் அல்டமாஸ் கபீர், ஜே. செலாமேஷ்வர் ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.
தீர்ப்பு விவரம்
குடும்ப வன்முறைச்சட்டம் அமலுக்கு வரும் முன்பாகவே அந்தப்பெண் பிரிந்து வாழ்ந்தாலும்கூட, அந்தச்சட்டத்தின்படி அவர் ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு. கணவரின் வீட்டில் வசிக்கும் உரிமையும் உண்டு.
இருப்பினும் எதிர்வழக்குதாரர் (சவீதா) தனது வீட்டில் வசிப்பதை வழக்குதாரர் ஏற்க மறுத்தால், அவர் மாற்று ஏற்பாடுகள் செய்துகொள்ள மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற உத்தரவு மாதம் ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற அளவில் மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் ஜீவனாம்சமாக மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். என்று தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications