தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் 158வது பிறந்த நாள் விழா: ஆளுங்கட்சி உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

U V Swaminatha Aiyar
மதுரை: தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சா.வின் 158வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அதிமுக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழ் தாத்தா டாக்டர் உ.வே.சாமிநாத ஐயரின் 158வது பிறந்த நாள் வரும் 19ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள உ.வே.சா.வின் திருவுருவச் சிலைக்குக் காலை 9 மணியளவில் தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் தூவி மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இந்நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்களும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும், தமிழறிஞர்களும், அரசு அலுவலர்களும், பொதுமக்களும் கலந்து கொள்கின்றனர்.

பல அரிய தமிழ்ச் சுவடிகளைத் திரட்டி, அவற்றை தொகுத்து தமிழ் உலகிற்குத் தந்தவர் டாக்டர் உ.வே.சாமிநாத ஐயர். பத்துப்பாட்டு, எட்டுத் தொகை போன்ற பல சங்க நூல்களை ஓலைச் சுவடிகளில் இருந்து அச்சு வடிவில் கொண்டு வந்த அரும்பணியில் அவர் ஈடுபட்டார். அவரது உழைப்பால் பல அரிய தமிழ்ச் சுவடிகள் கரையானிடம் இருந்து தப்பின.

திமுக ஆட்சியில் மட்டுமே தமிழ் அறிஞர்களுக்கு முக்கியத்துவம் அளித்து விழா எடுக்கப்படும் என்ற நிலை மாற்றி அதிமுக ஆட்சியிலும் தமிழ் வளர பாடுபட்டவர்களை சிறப்பு செய்வோம் என்று தமிழக அரசு முயற்சி எடுத்து வருகின்றது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+