சங்கரன்கோவில் தொகுதியில் அனைத்து கட்சிக் கொடி கம்பங்களையும் அகற்ற உத்தரவு
நெல்லை: இடைத் தேர்தல் நடக்கும் சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள கட்சிக் கொடி கம்பங்களை அகற்றவும், மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதியில் கட்சிக் கொடி கம்பங்கள் வெளியே தெரியாத அளவுக்கு மூடி மறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் நெல்லை கலெக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக் கூட்டத்தில் கட்சியினருக்கும், வேட்பாளர்களுக்கும் அதிகாரிகள் பல உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
அதன்படி, சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள கட்சிக் கொடி கம்பங்கள் அகற்றப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள மற்ற தொகுதியில் கட்சிக் கொடி கம்பங்கள் வெளியே தெரியாத அளவுக்கு மூடி மறைக்கப்பட வேண்டும்.
நகர்புறங்களில் சுவர் விளம்பரங்கள் செய்யப்படக் கூடாது. கிராமப் புறங்களில் வீடு, கட்டட உரிமையாளர்களிடம் முன் அனுமதி பெற்றே சுவர் விளம்பரம் செய்யப்பட வேண்டும்.
மாவட்டத்தில் ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட பணிகளை மட்டுமே தொடர்ந்து மேற்கொள்ளலாம். புதிய பணிகளை மேற்கொள்ள கூடாது.
இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை தேர்தல் பிரசாரத்தை அரசியல் கட்சியினர் மேற்கொள்ள கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
-
திமுகவின் அடுத்த அதிரடி.. கொமதேகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு.. கையெழுத்தான ஒப்பந்தம்! -
Velmurugan's TVK: எதே! 10 சீட்டா? வேல்முருகனின் "பிளானால்" அதிர்ந்த திமுக! கடைசியில் சொன்னது என்ன? -
பெரிய கேள்வியே இதுதான்.. ஓபிஎஸ்ஸுக்கு ஸ்டாலின் கொடுத்த பெரிய அசைன்மென்ட்.. களமே மாறப்போகுது! -
+2 மாணவி கொலை சம்பவம்.. 2 நாட்களாக போராடுகிறோம்.. உடனே ஏன் வரலை.. கனிமொழியை கேட்ட உறவினர்கள்! -
திமுகவை யாராலும் அழிக்க முடியாது.. புது கட்சி அவ்வளவுதான்! விஜயை தாக்கி வடிவேலு பேச்சு? நெட்டிசன்கள் ட்ரோல் -
18-ஆ? 25-ஆ காங்கிரஸுக்கு? அப்ப அதிமுக 210, திமுக 200 சீட்? சென்னை டூ கன்னியாகுமரி வரை திடீர் சேஞ்ச்? -
அண்ணா ஆட்சி ஏன் சிறப்பு? என்ன சாதித்தார் அவர்? 1967க்கு பிறகான தரமான சம்பவங்கள் இதோ..! -
மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு.. கடந்த தேர்தலை விட குறைக்கப்பட்டது ஏன்? பின்னணியில் துரை வைகோ! -
பெரம்பூர் தொகுதியில் விஜய் களமிறங்கினால்.. சேகர்பாபுவை களமிறக்க திமுக திட்டம்? ஆலோசனையில் அறிவாலயம்! -
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
அரசியல் வரலாறு: உலகத் தமிழ் மாநாட்டில் ஊழல்? அண்ணா மீது புகார்! சட்டசபையில் நடந்த காரசார விவாதம்! -
Dindigul: திண்டுக்கல் தொகுதியில் யாருக்கு வாய்ப்பு? திமுகவில் ஆர்வம் காட்டும் புதுமுகங்கள்!












Click it and Unblock the Notifications