'மார்க்கெட்' சுப்பிரமணியன் பேச்சைக் கேட்டு சங்கரன்கோவில் இன்ஸ்பெக்டரை மாற்றிய அரசு!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் அதிமுக இணைச் செயலாளர் மார்க்கெட் சுப்பிரமணியம் என்பவர் கொடுத்த புகாரையடுத்து உடனடியாக அத்தொகுதிக்கு நியமிக்கப்பட்டிருந்த உளவுப் பிரிவு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
நெல்லை நகர உளவுத் துறை இன்ஸ்பெக்டர் கிருஷ்ணசாமி சங்கரன்கோவில் தொகுதியையும் கூடுதலாக கவனித்து வந்தார். இந்நிலையில் அவர் அரசியல் கட்சியினர் சிலருக்கு உளவுத் துறையின் ரகசியத் தகவல்கள் மற்றும் புள்ளி விவரங்களை வழங்கியதாக சங்கரன்கோவில் தொகுதி அதிமுக இணைச் செயலாளர் மார்க்கெட் சுப்பிரமணியன் டி.ஜி.பி. மற்றும் கட்சி மேலிடத்திற்கு பேக்ஸ் மூலம் நேற்று புகார் அனுப்பினார்.
இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதி இன்ஸ்பெக்டர் பொறுப்பில் இருந்து கிருஷ்ணசாமி இன்று விடுவிக்க்ப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக நெல்லை மாவட்ட உளவுத் துறை இன்ஸ்பெக்டர் சிவசுப்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
வரும் 18ம் தேதி சங்கரன்கோவிலில் இடைத்தேர்தல் நடப்பதையொட்டி அமைச்சர்கள் அனைவரும் அத்தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications