நக்சல்களின் கூடாரம் என்று அரசு பள்ளிகளை கூறுவதா?: ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு கபில்சிபல் கடும் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

Kapil Sibal
டெல்லி: இந்தியாவின் அரசு பள்ளிக்கூடங்கள் அனைத்துமே நக்சலைட்டுகளின் கூடாரம் என்று வாழும்கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீரவிசங்கர் கூறியிருப்பதற்கு மத்திய அமைச்சர் கபில்சிபல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக கபில்சிபல் கூறியுள்ளதாவது:

ஸ்ரீரவி சங்கரின் கருத்தை ஏற்க முடியாது. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் , பிரபல நீதிபதிகள், அரசில் உயர் பதவி வகிப்போர் என்று ஏராளமான பிரபலங்கள் அரசு பள்ளிக்கூடங்களில் படித்தவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அரசு பள்ளிக்கூடங்களில் படித்த இவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா?'' என்றார் அவர்.

ரவிசங்கர் மறுப்பு

இதனிடையே தாம் அவ்வாறு கூறவில்லை என்று ஸ்ரீரவிசங்கர் மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

நக்சலைட்டுகள் உருவாகும் இடமாக அரசு பள்ளிக்கூடங்கள் இருப்பதாக நான் பொதுவாக கூறவில்லை, அரசு பள்ளிக்கூடங்களில் படித்து ஏராளமான அறிஞர்கள் உருவாகி இருக்கிறார்கள்.. நக்சலைட் பாதிப்பு உள்ள பகுதிகளில் இருக்கும் அரசு பள்ளிகளின் மோசமான நிலை பற்றிதான் தான் தெரிவித்தேன் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+