லாகூரில் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட இடத்தில் நினைவஞ்சலி:பாக் அரசும் கெளரவிக்க கோரிக்கை
லாகூர்: இந்தியாவின் தீரமிக்க இளைஞர்களின் முகவரியாக திகழும் மாவீரன் பகத்சிங்கை பாகிஸ்தான் அரசாங்கமும் கெளரவிக்க வேண்டும் என்று உலக பஞ்சாப் காங்கிரஸ் என்ற பாகிஸ்தான் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடிய பகத்சிங், சுகதேவ், ராஜ்குரு ஆகிய மூன்று இளைஞர்களும் லாகூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட நாள் இன்று! 1931-ம் ஆண்டு மார்ச் 23-ல் மூவரும் தூக்கிலிடப்பட்டனர்!
பாகிஸ்தான் நாட்டு லாகூரில் பகத்சிங் உள்ளிட்ட மூவரும் தூக்கிலிடப்பட்ட சிறைச்சாலை இப்போது சத்மான் செளக் என்றழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் உலக பஞ்சாப் காங்கிரஸ் அமைப்பினர் சார்பில் நேற்று மலர்தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
"இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்தகாலத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடிய பகத்சிங்கையும் அவரது தோழர்களையும் பாகிஸ்தான் அரசும் கெளரவிக்க வேண்டும். இதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக சத்மான் செளக்கிற்கு "பகத்சிங்" பெயரை சூட்ட வேண்டும் என்று உலக பஞ்சாப் காங்கிரஸ் அமைப்பின் தலைவர் பக்தர் ஜமான் கோரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications