இனியும் தாமதிக்காமல் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- டாக்டர் ராமதாஸ்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்ட சேதுக் கால்வாய் திட்டத்தை முடக்க வேண்டும் என்பதற்காகவே சில சக்திகள், ராமர் பாலம் என்ற கற்பனையான அமைப்பை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
தமிழகர்களின் 150 ஆண்டு கால கனவுத் திட்டமான சேதுக் கால்வாய் திட்டத்தை முடக்கிப்போட வேண்டும் என்றும் கருதுவது தமிழக நலனுக்கு எதிரானதாகவே அமையும். இத்தகைய நிலைப்பாட்டை தமிழக முதல்-அமைச்சர் மாற்றிக் கொள்ள வேண்டும்.
நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்துவதற்கு மத நம்பிக்கைகள் தடையாக இருக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் பல தீர்ப்புகளில் தெளிவுப்படுத்தியுள்ளது.
எனவே, கற்பனை கதைகளுக்கு செவிமடுக்காமல், சேதுக் கால்வாய் திட்டத்தை விரைந்து செயல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில் உச்சநீதிமன்றத்தில் பதில் மனுதாக்கல் செய்து, சேதுக் கால்வாய் திட்டத்திற்கு எதிரான வழக்கை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications