சியாச்சின் அருகே பனிப்பாறை சரிவில் சிக்கி 130 பாகிஸ்தான் படையினர் உயிரிழப்பு?
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்: இந்தியா- பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச்சின் அருகே பனிப்பாறை சரிவில் 130 பாகிஸ்தான் படையினர் புதைந்துபோனதாக அந்நாட்டுப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சியாச்சின் மலைப் பகுதியில் ஆயிரக்கணக்கான இந்திய -பாகிஸ்தான் படையினர் எல்லைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை திடீரென அப்பகுதியில் பனிப்பாறை சரிந்ததில் 130 படையினர் உயிரோடு பனிப்பாறை சரிவுகளில் புதைந்து போனதாகக் கூறப்படுகிறது. இவர்களின் நிலைமை என்ன என்பது பற்றி தெரியவில்லை.
புதைந்துபோன பாகிஸ்தான் படையினர் உயிரிழந்துவிட்டனரா? மீட்கப்பட்டனரா? என்பது பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.












Click it and Unblock the Notifications