கமுதி அருகே அதிமுகவினரிடையே மோதல்- அரிவாள் வெட்டு
கமுதி: கமுதி அருகே உள்ளாட்சி தேர்தல் முன் விரோதம் தொடர்பாக அதிமுகவைச் சேர்ந்த இரு கோஷ்டியினர் ஆயுதங்களுடன் மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது..
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இலந்தைக்குளம் அதிமுக ஊராட்சி தலைவராக இருப்பவர் இருளன். கமுதி ஊராட்சி ஒன்றியம் 10 வது வார்டு கொல்லங்குளம் அதிமுக கவுன்சிலராக இருப்பவர் முத்துராமலிங்கம். இவர்களுக்கு இடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.
இந்நிலையில் இலந்தைகுளம் கண்மாயில் உள்ள காட்டு கருவேல மரங்களை இருளன் தரப்பை சேர்ந்த முருகேசன் வெட்டியுள்ளார். இதனை முத்துராமலிங்கம் தரப்பை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் தடுத்துள்ளார். இதனால் இரு தரப்புக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிவடைந்துள்ளது. ஏற்பட்டுள்ளது.
இது குறித்த புகாரின் பேரில், 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.இந்த விவகாரத்தில் தலைமறைவான ஒன்றிய கவுன்சிலர் முத்துராமலிங்கம் தரப்பினரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனிடையே இருளன் தரப்பை சேர்ந்த சிலர் ஆயுதங்களுடன் சென்று கிருஷ்ணன் வீட்டை அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலந்தைக் குளத்தில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications