நாமக்கல் அருக அரசு கோப்புகளை வீட்டில் மறைத்து வைத்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. கைது
நாமக்கல்: நாமக்கல் அருக அரசு கோப்புகளை வீட்டில் மறைத்து வைத்திருந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. பழனிசாமியை போலீசார் கைது செய்தனர்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ளது முத்துக்காப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. பழனிசாமி(61). அவர் தனது வீட்டில், விதிமுறைகளை மீறி கிராம பதிவேட்டை பதுக்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகின்றது. மேலும், உரிய உரிமம் பெறாமல் பத்திரமும் எழுதி வந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. இது குறித்து நாமக்கல் கோட்டாட்சியர் வினயிடம் புகார் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து நாமக்கல் ஆர்.டி.ஓ. வினய் தலைமையில் தாசில்தார் புஷ்பவதி உள்ளிட்ட வருவாய்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ. பழனிசாமி வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். சோதனையின்போது, அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த அ பதிவேடு “A” Registar சிக்கியது. உடனே அவற்றை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து தாசில்தார் புஷ்பவதி கொடுத்த புகாரின்பேரில் பழனிசாமி மீது சேந்தமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.