இன்று கூடங்குளம் வரும் அணு மின் விஞ்ஞானிகள் குழு: போலீசார் குவிப்பு
நெல்லை: அணு மின் நிலையப் பணிகளை பார்வையிட விஞ்ஞானிகள் குழு இன்று கூடங்குளம் வருகிறது.
கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகாவாட் திறனுள்ள 2 அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் முதல் அணு உலையில் பணிகள் 99 சதவீதம் முடிவடைந்துவிட்டன. முதல் அணு உலை மூலம் ஜூன் மாதம் மின் உற்பத்தியை துவங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக பிற அணு மின் நிலையங்களில் இருந்து ஊழியர்கள் கூடங்குளம் வந்துள்ளனர். இந்நிலையில் இந்திய அணு சக்தி கழகத் தலைவர் ஸ்ரீகுமார் பானாஜி, மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் சின்ஹா, அணு சக்தி கழக உறுப்பினர்கள் சீனிவாசன், மத்திய நிபுணர் குழு தலைவராக இருந்த முத்துநாயகம், அதில் இடம் பெற்ற பிரதிநிதிகள், விஞ்ஞானிகள் அடங்கிய குழு இன்று கூடங்குளம் வருகிறது. இதற்காக இந்திய அணு சக்தி கழக தலைவர் ஜெயினும் கூடங்குளம் வந்துள்ளார்.
கூடங்குளம் அணு மின் நிலைய பணிகளை பார்வையிடும் குழுவினர் விரைவில் மின் உற்பத்தியை தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்கள். இது தொடர்பான விஞ்ஞானிகள் சந்திப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் மதியம் 12.30 மணி்க்கு கூடங்குளம் அணு மின் நிலைய அதிகாரிகளை சந்தி்த்து பேசுகிறார்கள். விஞ்ஞானிகள் குழு கூடங்குளம் வருவதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications