மதுரையில் மே 10 - 11 ம் தேதிகளில் பாஜக மாநில மாநாடு
மதுரை: மழை காரணமாக, மதுரையில் ஒத்திவைக்கப்பட்ட பாரதிய ஜனதா மாநில மாநாடு மே 10 ந் தேதி மற்றும் 11 ந் தேதி நடைபெறுகின்றது.
தமிழக பாஜக சார்பில் மதுரையில் நேற்றும், இன்றும் தாமரை சங்கமம் எனும் மாநாடு நடைபெறுவதாக இருந்தது. தடும் மழை காரணமாக இந்த மாநாடு ஒத்திவைக்கப்பட்டது.
கடும் மழை குறைந்ததால், மீண்டும் இம் மாநாட்டை நடத்துவது குறித்து அக் கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ், மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் ஆகியோர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், மே 10 ந் தேதி மற்றும் 11 ந் தேதி ஆகிய இரு நாட்களில் மாநாடு நடத்த முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து பாஜக தேசிய செயலாளர் முரளிதரராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது
மதுரையில் பாஜக சார்பில் நடைபெற இருந்த மாநாடு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. ஏற்கனவே திட்டமிட்டிருந்ததைவிட பிரமாண்டமாக மே 10 மற்றும் 11 ந் தேதிகளில் நடத்தப்படும். மே 10 ம் தேதி மாநாடும், 11 ம் தேதி கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களும் நடைபெறும்.
மே 10 ந் தேதி பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, தேசிய தலைவர் நிதின்கட்கரி, சுஷ்மா சுவராஜ், அருண்ஜெட்லி மற்றும் தேசிய, மாநில நிர்வாகிகள் மநாட்டில் பேசுகின்றனர் என்றார்.












Click it and Unblock the Notifications