மோசடி நிறுவனத்தை காப்பாற்ற முயன்ற விவகாரம்: ஐ.ஜி. பிரமோத் குமார் கைது
கோவை: மோசடி நிதி நிறுவனத்தை காப்பாற்ற முயன்றதற்காக ஐ.ஜி. பிரமோத் டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூரில் பாசி என்ற நிதி நிறுவனம் இயங்கி வந்தது. அந்நிறுவனம் சுமார் ரூ.500 கோடி மோசடி செய்ததாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மோசடி நிறுவனம் என்று பெயரெடுத்த பாசியை மேற்கு மண்டல ஐ.ஜி. பிரமோத் குமார் காப்பாற்ற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப் பதிவு இது குறித்து விசாரித்து வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக சென்னை கோயம்பேட்டில் உள்ள ஐ.ஜி பிரமோத் குமார் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். எந்த நேரத்திலும் தான் கைதாகலாம் என்று நினைத்த ஐ.ஜி. பிரமோத் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து டெல்லியில் வைத்து பிரமோத் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை கோவை கொண்டு வர போலீசார் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications