For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடியாத்தத்தில் பரிதாபம்.. தேரோட்டத்தில் மின்சாரம் தாக்கி 5 பேர் பலி

Google Oneindia Tamil News

குடியாத்தம்: வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நடந்த கோவில் திருவிழா தேரோட்டத்தின்போது மின்சாரம் தாக்கியதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தேரோட்டம் நிறுத்தப்பட்டது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டை சிவகாமசுந்தரி சமேத கருப்புலீஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. தொடர்ந்து தேர் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது நல்ல மழை பெய்ததால், தேர் முழுவதுமாக நனைந்து விட்டது. இந்த நிலையில், தேரை இழுக்க இரும்புக் கம்பியால் ஆன வடம் பொருத்தப்பட்டிருந்தது. அதைப் பிடித்தபடி தேரை பக்தர்கள் இழுத்து வந்தனர்.

நள்ளிரவு வாக்கில் தேர் பேரணாம்பட்டு கூட்டு ரோடு பகுதிக்கு வந்தது. அப்போது மேலே சென்ற மின்சார கம்பியில், தேரின் மேல் பகுதி உரசி அறுந்து விழுந்தது. அப்போது தேரில் மின்சாரம் பாய்ந்து, அத்துடன் இணைந்திருந்த இரும்புக் கம்பியைப் பிடித்தவர்கள் மீது பாய்ந்தது. இதில் கம்பியைப் பிடித்திருந்த அத்தனை பேரும் தூக்கி எறியப்பட்டனர்.

இதனால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டது. மின்சாரம் தாக்கி விழுந்திருந்தவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இவர்கள் குடியாத்தம் கார்த்திகேயன், நெல்லூர்பேட்டையைச் சேர்ந்தவர்களான ஈழத்தரசன், புனிதா, விஸ்வநாதன், விக்னேஷ் என்று தெரிய வந்தது. இவர்களில் கார்த்திகேயனும், விக்னேஷும் 19 வயதானவர்கள்.

மின்சாரம் தாக்கியவர்களில் 25 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தால் தேர் அங்கேயே நிறுத்தப்பட்டது. பின்னர் தேருக்கு சிறப்புப் பூஜைகள் செய்து மீண்டும் வடம் பிடித்து இழுத்து நேற்று காலை நிலைக்குக் கொண்டு வந்து நிறுத்தினர்.

சமீபத்தில்தான், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கயிலாயநாதர் கோவில் தேர் அச்சு முறிந்து சரிந்து விழுந்ததில் தேரின் அடியில் சிக்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அதேபோல நாகூர் ஆண்டவர் செய்யது அப்துல் காதிர் நாயகம் நினைவு நாளை முன்னிட்டு நாகூர் தர்காவில் நடந்த 455வது ஆண்டு கந்தூரி விழாவின்போது, அலங்கரிக்கப்பட்ட ரதம் மின்கம்பியில் பட்டு மின்சாரம் தாக்கி 2 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில், குடியாத்தத்தில் தேர் மீது மின் கம்பி விழுந்து ஐந்து பேரின் உயிரைப் பறித்துள்ளது மக்களை அதிர வைத்துள்ளது.

English summary
5 devotees electrocuted during Gudiyatham Sivakama sundari temple car festival. 25 persons were injured and admitted in govt hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X