கடையநல்லூர் மர்மக் காய்ச்சல்-தடுக்கத் தவறிய 2 சுகாதார அதிகாரிகள் சஸ்பெண்ட்!
திருநெல்வேலி: கடையநல்லூர், கடையம் பகுதிகளில் மர்ம காய்ச்சலுக்கு 6 பேர் பலியானதைத் தொடர்ந்து தமிழக மருத்துவ இயக்குனர்கள் குழு கடையநல்லூர் சென்று இன்று ஆய்வு நடத்தியது. அப்போது காய்ச்சல் வேகமாக பரவுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்காத இரண்டு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
நெல்லை மாவட்டம் கடையநல்லூர், வடகரை ஆகிய இடங்களில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மர்ம காய்ச்சல் பரவி வருகிறது. மர்ம காய்ச்சலுக்கு சந்துரு, கார்த்திகேயன், 10 மாத பெண் குழந்தை, ஒரு பெண், பக்கீர் மூகைதீன், வனராஜ் ஆகிய 6 பேர் பலியாகிவிட்டனர். மேலும் பரவி வரும் காய்ச்சலால் பலரும் பாதிக்கப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது டெங்கு காய்ச்சல்தான் என சுகாதார துறையினர் கூறி கடையநல்லூர் நகராட்சியில் 18 வார்டுகளிலும் வார்டுக்கு 2 குழுக்கள் வீதம் மருத்துவ குழு அமைத்துள்ளனர். இந்த குழுவினர் வீடு வீடாக சென்று கொசு மருந்து அடித்து வருகின்றனர். ஆனாலும் காய்ச்சல் கட்டுக்குள் வந்தபாடில்லை.
கடையம் மர்ம காய்ச்சலுக்குப் பலர் பலியாகி வருவதால் தமிழக பொது சுகாதார துறை இயக்குனர் டாக்டர் பொற்கை பாண்டியன், கூடுதல் இயக்குனர் டாக்டர் கண்ணன், மருத்துவ பணிகள் இயக்குனர் டாக்டர் பஞ்சாட்சரம் ஆகியோர் அடங்கிய குழுவினர் இன்று கடையநல்லூர் வந்தனர்.
இவர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதுடன் மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினர். இதன் இறுதியில் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கத் தவறிய மாவட்ட மலேரியா அலுவலர் மோகன், சுந்தரபாண்டியன் ஹெல்த் இன்ஸ்பெக்டர் செல்லத்துரை ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications