நகைக்கடைக்குள் வெல்டிங் வைத்து புகுந்த 9 வட மாநில கொள்ளையர்கள்- கூண்டோடு சிக்கினர்!
தர்மபுரி: தர்மபுரியில் உள்ள பிரபலமான நகைக் கடை ஒன்றுக்குள், கதவை வெல்டிங் வைத்து உடைத்து உள்ளே புகுந்த வட மாநிலக் கொள்ளையர்கள் 9 பேரும் கூண்டோடு போலீஸாரிடம் சிக்கினர். கடை உரிமையாளர் ஏற்படுத்தி வைத்திருந்த அட்டகாசமான பாதுகாப்பு ஏற்பாடு காரணமாக சிந்தாமல் சிதறாமல் அத்தனை கொள்ளையர்களையும் போலீஸாரால் எளிதில் பிடிக்க முடிந்தது. தர்மபுரியில் இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தர்மபுரி பஸ் நிலையப் பகுதியில் ஒரு பிரபலமான நகைக் கடை உள்ளது. அந்தக் கடைக்கு நேற்று நள்ளிரவு ஒரு கொள்ளைக் கும்பல் வந்துள்ளது. கடையின் கதவை வெல்டிங் வைத்து உடைத்துள்ளனர்.
கடை உரிமையாளர், அங்கு நவீன பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து வைத்திருந்தார். அதாவது கடையின் கதவை யாரேனும் சேதப்படுத்தினால் அல்லது தொட்டால் அதுகுறித்து கடையில் பொருத்தப்பட்டுள்ள நவீன பாதுகாப்பு சாதனம் மூலம், கடை உரிமையாளருக்கு எஸ்.எம்.எஸ். போய் விடுமாம். அதேபோல நேற்றும் கொள்ளையர்கள் கடையின் கதவை வெல்டிங் வைத்து உடைத்தபோதும் உடனடியாக எஸ்.எம்.எஸ் போயுள்ளது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் கொடுத்து விட்டு தானும் கடைக்கு கிளம்பினார். போலீஸார் மின்னல் வேகத்தில் சென்று கடைக்குள் புகுந்திருந்த 9 கொள்ளையர்களையும் அப்படியே வளைத்துப் பிடித்து விட்டனர். போலீஸார் வந்தபோது கடையின் 4வது தளத்தில் கொள்ளையர்கள் இருந்தனர்.
அத்தனை பேரையும் காவல் நிலையத்திற்குத் தூக்கிக் கொண்டு வந்து போலீஸார் விசாரித்தபோது அவர்கள் 9 பேரும் வட மாநிலக் கொள்ளையர்கள் என்று தெரிய வந்தது. இவர்கள் ஒரு லாட்ஜில் தங்கிக் கொண்டு இந்தக்கடையை நோட்டமிட்டு வந்துள்ளனர். பின்னர் சமயம் பார்த்து கடைக்குள் புகுந்துள்ளனர். ஆனால் கடையில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துத் தெரியாமல் போனதால் கூண்டோடு மாட்டிக் கொண்டனர்.
பிடிபட்ட கொள்ளையர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு தமிழகத்தில் வேறு எந்தப் பகுதியில் நடந்த நகைக் கொள்ளையிலாவது தொடர்பு உள்ளதா என்பது குறித்துத் தெரியவில்லை. குறிப்பாக திருப்பூர் நகைக் கடையை சுத்தமாக அள்ளி எடுத்துச் சென்ற வழக்கில்இவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பதுகுறித்து போலீஸார் துருவித் துருவி விசாரித்து வருகின்றனர்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications