பிளஸ் 2 மாணவர்களுக்கு அக்டோபருக்குள் லேப்டாப் விநியோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 மாணவர்கள் அனைவருக்கும் வரும் அக்டோபர் மாதத்துக்குள் அரசின் இலவச லேப்டாப் வழங்கப்பட்டுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், கலை, அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள், பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள் என மொத்தம் 9 லட்சம் பேருக்கு இலவச லேப்-டாப்புகள் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ஏற்கெனவே பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் பணி தொடங்கியது. இதுவரை 62 ஆயிரம் பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் மூலமாக வழங்கப்பட்டு வரும் இந்த லேப்டாப்புகள் பிற மாவட்டங்களிலும் விநியோகிக்கப்பட உள்ளன.

சான்றிதழில் முத்திரை?

பிளஸ் 2 மாணவர்களுக்குக் கொடுக்கப்பட உள்ள மதிப்பெண் சான்றிதழில் லேப்-டாப் கொடுத்ததற்கான முத்திரையும் இடப்படக் கூடும். லேப்-டாப் பெறாத மாணவர்களுக்கும் அதற்கான முத்திரையும் மதிப்பெண் சான்றிதழிலேயே இடப்படும். இந்த முத்திரையைக் காண்பித்து லேப்-டாப்புகள் தயாரான பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்பதற்காக இத்தகைய ஒரு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அரசின் லேப்டாப்புகளை லெனோவா, எச்.சி.எல்., ஏசர், எச்.பி., விப்ரோ, ஆர்.பி. இன்போசிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் தயாரித்து வழங்குகின்றன,

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+