நேரு வந்தபோது பாத்ரூமுக்குள் ஓடி ஒளிந்த ராஜீவ் காந்தி!

இந்த சம்பவம் குறித்து ராஜீவ் படித்த டேராடூன், டூன் பள்ளியின் முதல்வராக இருந்த ஜான் மார்ட்டினின் மனைவி மேடி மார்ட்டின் எழுதியுள்ள நூலில் இந்த சம்பவம் குறித்துப் படித்தாராம் அய்யர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் ராஜீவ் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வயது 11. அப்போது அவரது தாத்தாவான ஜவாஹர்லால் நேரு அவரைப் பார்க்க பள்ளிக்கு வந்திருக்கிறார். அப்போது எங்கு தேடியும் ராஜீவைக் காணவில்லை. எல்லோரும் பதற்றமாக, குளியலறையில் இருந்த ஒரு கூடையில் அவர் ஒளிந்திருந்தது கடைசியில்தான் தெரியவந்ததாம். டூன் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த ஜான் மார்ட்டினின் மனைவி மேடி மார்ட்டின் எழுதிய புத்தகத்தில் இந்தச் சம்பவம் பற்றி நான் படித்தேன்.
1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நான் அவரது இணைச் செயலாளராகப் பணியாற்றினேன். டூன் பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவருடன் நானும் டேராடூனுக்குச் சென்றேன். அப்போது கிடைத்த புத்தகத்தை விமானத்தில் படித்தேன்.
கூச்ச சுபாவம் காரணமாக குளியலறைக்குள் ராஜீவ் ஒளிந்திருந்தார் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜீவிடம் இதுபற்றிக் கேட்டபோது, அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான்; எனினும் ஒளிந்து கொண்டதற்கான காரணம் வேறு என்று அவர் கூறினார் என்று அய்யர் கூறியுள்ளார்.
ஏன் ஓடி ஒளிந்தார் என்பது குறித்து ராஜீவ் விளக்குகையில், நேருவை சந்திக்கப் பயந்தோ அல்லது அரசியலிலிருந்து தூரமாக இருக்கவோ நான் ஓடி ஒளியவில்லை. நான் எப்போதெல்லாம் நேருவுக்கு சாதகமாக எனது நண்பர்களிடம் பேசினாலும், அவர்கள் நான் நேருவை ஆதரித்தே பேசுவதாக கூறுவார்கள் என்று கூறினார் என்றார் அய்யர்.
ராஜீவ் குறித்து மேலும் அய்யர் கூறுகையில், 1984ம் ஆண்டு பிரதமராக ராஜீவ் வந்துபோது அவர் அதற்கு உண்மையிலேயே தயார் நிலையில் இல்லை. 40 வயதான ஒருவர் பிரதமரானபோது அனைவருமே அவரை குறைத்தே மதிப்பிட்டனர். ஆனால், தனது சிந்தனை மற்றும் செயலாற்றல் மூலம் அதை தவிடுபொடியாக்கினார் ராஜீவ் என்றார் அய்யர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications