நேரு வந்தபோது பாத்ரூமுக்குள் ஓடி ஒளிந்த ராஜீவ் காந்தி!

இந்த சம்பவம் குறித்து ராஜீவ் படித்த டேராடூன், டூன் பள்ளியின் முதல்வராக இருந்த ஜான் மார்ட்டினின் மனைவி மேடி மார்ட்டின் எழுதியுள்ள நூலில் இந்த சம்பவம் குறித்துப் படித்தாராம் அய்யர்.
இதுகுறித்து அவர் கூறுகையில், டேராடூனில் உள்ள டூன் பள்ளியில் ராஜீவ் படித்துக் கொண்டிருந்தபோது அவருக்கு வயது 11. அப்போது அவரது தாத்தாவான ஜவாஹர்லால் நேரு அவரைப் பார்க்க பள்ளிக்கு வந்திருக்கிறார். அப்போது எங்கு தேடியும் ராஜீவைக் காணவில்லை. எல்லோரும் பதற்றமாக, குளியலறையில் இருந்த ஒரு கூடையில் அவர் ஒளிந்திருந்தது கடைசியில்தான் தெரியவந்ததாம். டூன் பள்ளியின் தலைமையாசிரியராக இருந்த ஜான் மார்ட்டினின் மனைவி மேடி மார்ட்டின் எழுதிய புத்தகத்தில் இந்தச் சம்பவம் பற்றி நான் படித்தேன்.
1985-ல் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, நான் அவரது இணைச் செயலாளராகப் பணியாற்றினேன். டூன் பள்ளியின் 50-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக அவருடன் நானும் டேராடூனுக்குச் சென்றேன். அப்போது கிடைத்த புத்தகத்தை விமானத்தில் படித்தேன்.
கூச்ச சுபாவம் காரணமாக குளியலறைக்குள் ராஜீவ் ஒளிந்திருந்தார் என்று புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ராஜீவிடம் இதுபற்றிக் கேட்டபோது, அந்தச் சம்பவம் நடந்தது உண்மைதான்; எனினும் ஒளிந்து கொண்டதற்கான காரணம் வேறு என்று அவர் கூறினார் என்று அய்யர் கூறியுள்ளார்.
ஏன் ஓடி ஒளிந்தார் என்பது குறித்து ராஜீவ் விளக்குகையில், நேருவை சந்திக்கப் பயந்தோ அல்லது அரசியலிலிருந்து தூரமாக இருக்கவோ நான் ஓடி ஒளியவில்லை. நான் எப்போதெல்லாம் நேருவுக்கு சாதகமாக எனது நண்பர்களிடம் பேசினாலும், அவர்கள் நான் நேருவை ஆதரித்தே பேசுவதாக கூறுவார்கள் என்று கூறினார் என்றார் அய்யர்.
ராஜீவ் குறித்து மேலும் அய்யர் கூறுகையில், 1984ம் ஆண்டு பிரதமராக ராஜீவ் வந்துபோது அவர் அதற்கு உண்மையிலேயே தயார் நிலையில் இல்லை. 40 வயதான ஒருவர் பிரதமரானபோது அனைவருமே அவரை குறைத்தே மதிப்பிட்டனர். ஆனால், தனது சிந்தனை மற்றும் செயலாற்றல் மூலம் அதை தவிடுபொடியாக்கினார் ராஜீவ் என்றார் அய்யர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications