டி.என்.பி.எஸ்.சி. தேர்வுக்கு பணம் கட்ட வங்கிகளில் நிரம்பி வழியும் கூட்டம்

டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக சுமார் 10,000 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். தேர்வு அறிவிக்கப்பட்ட குறுகிய நாட்களிலேயே பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு விண்ணப்பம் செய்பவர்களில் தகுதியற்றவர்கள் முதல் கட்டமாக ஆன்லைனிலேயே நிராகரிக்கப்படுகின்றனர். தகுதியுடையை நபர்களின் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதற்குரிய சான்று மற்றும் பணம் கட்ட சலான் வழங்கப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் சலான் மூலம் இந்தியன் வங்கி அல்லது அஞ்சலகங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பணம் கட்ட வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வுக்கு பல லட்சம் பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளதால் அவர்கள் பணம் கட்ட வங்கி அல்லது அஞ்சலகங்களைத் தேடி வருகின்றனர். இதனால் பல்வேறு மாவட்டங்களில் வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் கூட்டம் நிரம்பி வழிகின்றது.












Click it and Unblock the Notifications