தெலுங்குதேசம் எம்.எல்.ஏ. கொலையில் ஜெகனுக்கு தொடர்பு: சிபிஐ விசாரணை கோரி மனைவி உண்ணாவிரதம்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தனது கணவர் கொலையில் தொடர்பு இருப்பதாகவும், அவரிடம் இது குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பரிதலா சுனிதா உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ. பரிதலா ரவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டார். அவரது கொலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொடர்பு உள்ளது என்று ரவியின் மனைவி பரிதலா சுனிதா புகார் தெரிவித்தார். இதையடுத்து அப்போதைய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி இந்த கொலை சம்பவம் குறித்து விசாரிக்குமாறு சிபிஐ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அவர்களும் விசாரணை நடத்தி ரவியின் கொலைக்கும், ஜெகனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெரிவித்தனர்.

இந்நிலையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த ரவியின் மனைவி தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ. பரிதலா சுனிதா சந்தோஷப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

எனது கணவர் பரிதலா ரவி கொலையில் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தொர்டபு உள்ளது. அதனால் இது குறித்து அவரிடம் சிபிஐ மீண்டும் விசாரிக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நான் உண்ணாவிரதம் இருக்கவிருக்கிறேன் என்றார்.

அவர் கூறியவாறே இன்று அனந்தபுரம் மாவட்டம் ரலஸ்தாரு நகரில் உள்ள அம்பேத்கார் சிலை அருகே அமர்ந்து உண்ணாவிரத்தத்தை துவங்கினர். இதில் தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+