சி.பி.எம்.க்கு ஷாக் கொடுத்த அச்சுதானந்தன்- கொல்லப்பட்ட சந்திரசேகர் குடும்பத்துக்கு நேரில் ஆறுதல்
இடுக்கி: கேரளத்தில் பெரும் சர்ச்சையை உருவாகி யிருக்கும் புரட்சி மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் சந்திரசேகரன் குடும்பத்தினரை மார்க்சிஸ்ட் கட்சியினர் யாரும் சந்திக்கக் கூடாது என்ற கட்சி உத்தரவை மீறி முன்னாள் முதல்வர் அச்சுதானந்தன் நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார். கட்சி உத்தரவை பகிரங்கமாக அச்சுதானந்தன் மீறியிருப்பது கேரள மார்க்சிஸ்ட் கட்சிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த சந்திரசேகரன், மார்க்சிஸ்ட் கட்சியிலிருந்து விலகி புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியைத் தொடங்கினார். ஆனால் அவர் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இப்படுகொலை தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர். இது மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது. கட்சியின் பொதுச்செயலாளர் பினராய் விஜயன் தூண்டுதலாலேயே இந்த படுகொலை நடந்ததாக கேரள முன்னாள் முதல்வரும் மூத்த மார்க்சிஸ்ட் தலைவருமான அச்சுதானந்தன் பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.
இந்நிலையில் இடுக்கி மாவட்ட மார்க்சிஸ்ட் செயலர் மணியோ, மார்க்சிஸ்ட் கட்சிக்கு துரோகம் செய்தவர்களை படுகொலை செய்திருக்கிறோம்.. செய்வோம் என்று கூற விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. மணி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை கைது செய்ய மும்முரம் காட்டி வருகிறது கேரள போலீஸ்.
இதனிடையே பினராய்விஜய்தான் தமது கணவரின் கொலைக்கு காரணமானவர் என்று சந்திரசேகர் மனைவியும் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தார். இதில் கடுப்படைந்த மார்க்சிஸ்ட் கட்சி, தொண்டர்கள் யாரும் சந்திரசேரகன் வீட்டுக்குச் செல்லக் கூடாது என்று உத்தரவிட்டது.
ஆனால் மார்க்சிஸ் கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் சந்திரசேகரன் வீட்டுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறியிருக்கிறார் அச்சுதானந்தன. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி அச்சுதானந்தன் சென்றிருப்பதால் கேரள மார்க்சிஸ்ட் கட்சியின் உள்மோதல் உச்சத்தை அடைந்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications